இந்திய அணு சக்தி ஒப்பந்தம்: புஷ் பாராட்டு
வாஷிங்டன்:இந்தியாவுடன் செய்து கொண்ட சிவில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்அளித்திருப்பதற்கு அதிபர் ஜார்ஜ் புஷ் பாராட்டி வரவேற்றுள்ளார்.
இந்திய, அமெரிக்க சிவில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஒப்புதல்அளித்துள்ளன. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தும் உத்தரவில் அதிபர் புஷ் கையெழுத்திடவுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றம், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதை புஷ் வரவேற்றுப்பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இரு தரப்பு உறவுகளையும் இந்த ஒப்புதல் வலுப்படுத்தும். இதன் மூலம் இரு நாடுகளும் நிறைய பலன்களைஅடையும். இரு நாடுகளும் அணு சக்தித் திட்டங்களில இணைந்து செயல்படக் கூடிய சூழ்நிலை எழுந்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசற்ற புதிய உலகத்தைப் படைக்க அணு சக்தி மிகவும் அவசியமானது. அப்படிப்பட்ட புதியதொழில்நுட்பத்தை இரு நாடுகளும் இணைந்து கடைப்பிடிக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகும். இந்த ஒப்பந்தம்மூலம் இரு தரப்பு வர்த்தகமும் கூட மேம்பாடு அடையும்.
அமெரிக்க வரலாற்றில் இது முக்கியமான ஒரு நிகழ்வு. இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நேரத்தை நான்ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார் புஷ்.