For Daily Alerts
Just In
அணை பிரச்சினைக்கு சுமூக தீர்வு: கேரள காங்.
சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு கிடைக்கும் என்றுகேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.
சென்னைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணையின் உயரத்தைஅதிகரித்தால், ஐந்து மாவட்ட கேரள மக்கள் பெரும் அபாயத்துக்கு உள்ளாவார்கள்.எனவே உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்சினைக்கு இரு மாநில அரசுகளும் சுமூகதீர்வு காண முன்வர வேண்டும்.
புதிய அணை கட்டி அதிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தருவது குறித்து ஒப்பந்தம்போட்டுக் கொள்ளலாம் என்பதே கேரள அரசின் கோரிக்கை.நதிகளை தேசியமாக்குவது என்பது முன்பு கூறப்பட்ட யோசனை. இப்போது சிலமாநிலங்கள அதை ஒப்புக் கொள்ளவில்லை.
எனவே இத்திட்டத்தை அமல்படுத்தவதற்கு முன்பு அனைத்து மாநிலங்களின்கருத்துக்களையும் கேட்டறிந்து செயல்படுவது நல்லது என்றார் சென்னிதாலா.
Comments
Story first published: Saturday, December 16, 2006, 5:30 [IST]