For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரமாணர்கள் மீதான தாக்குதல்-சுவாமி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:பிராமணர்களுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபட்டு வரும் திராவிடர்கழகத்தினரை முதல்வர் கருணாநிதி எச்சரிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதையடுத்து சில இடங்களில் தி.கவினர் பிராமணர்கள்மீது தாக்குதல் நடத்தி அவர்கள் அணிந்திருந்த பூணூலை அறுத்து காட்டுமிராண்டித்தனம்செய்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து சுவாமி கூறுகையில்,

திருச்சியில் ஈ.வெ.ரா. சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும்திராவிடர் கழகத்தினர் பிராமணர்களுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

கோவில்களில் சுவாமி சிலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாகதிராவிடர் கழக தலைவர் வீரமணியை முதல்வர் கருணாநிதி எச்சரிக்க வேண்டும்.

திராவிடர் கழகத்தினர் தங்களது எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவிக்கவேண்டுமே தவிர, வன்முறை செயல்களில் ஈடுபடக் கூடாது. இந்த சம்பவங்களைதமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்தி நடந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் இவர்களுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.ஈ.வெ.ரா. சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் இருந்து தயானந்தசரஸ்வதி சுவாமிகள் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார் சுவாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X