கோவில் நில ஆக்கிரமிப்பு: தப்பினார் பீட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், கர்நாடக இசைப் பாடகர்பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பீட்டர், பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்ட 11 பேருக்கு இந்து அறநிலையத்துறை கடந்த 1998ம் ஆண்டு ஒருநோட்டீஸை அனுப்பியது. அதில், சென்னை கதீட்ரல் சாலையில், கனகஸ்ரீ நகரில் தாங்கள் குடியிருக்கும் வீடுகள்அமைந்துள்ள நிலம், மைலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானது. எனவே இடத்தைக் காலிசெய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து பீட்டர் உள்ளிட்ட அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தமனுவை நீதிபதி பத்ருடு விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 100ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்கள் பல்வேறு நபர்களின் பெயர்களில் இருந்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக மனுதாரர்கள் இங்குதான் வசித்து வருகின்றனர். எனவே இந்த நிலத்தை ஆக்கிரமித்துஇருப்பதாக இந்து அறநிலையத்துறை கூறுவது நியாயமற்றது. அனைத்து நிலங்களுக்கும் முறையான பத்திரங்கள்உள்ளன என்று வாதிட்டனர்.

இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினிஸ்ரீ, இந்த நிலங்களுக்கான பட்டா பத்திரங்கள்கோவில் பெயரில்தான் உள்ளன என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருதப்படுவோருக்கு எதிராக சிவில்வழக்குதான் தொடர முடியும். அதற்குப் பதில் நோட்டீஸ் அனுப்பியது சட்ட விரோதம். தேவைப்பட்டால்அவர்கள் மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என கூறி நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+