காவல் நிலையத்தில் ரெய்டு: நீதிபதிகள் சஸ்பெண்ட்
திருநெல்வேலி:நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு சென்று சோதனை நடத்தி நெல்லையில், பரபரப்பை ஏற்படுத்திய மாவட்டமுதன்மை செஷன்ஸ் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் ஆகியோர் திடீர் என சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருப்பவர் நாகநாதன். 4வது நீதித்துறை நடுவராக இருப்பவர்நாகராஜன். இருவரும் கடந்த 8ம் தேதி நள்ளிரவில் பாளையங்கோட்டை மேட்டுத் திடலில் உள்ள அரசுமருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு வக்கீல்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்தஇரு நீதிபதிகளும் அங்கு வந்த உதவி ஆணையர் மரிய ஜார்ஜ், சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோரிடம்இது யாருடைய கார் என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு இரு அதிகாரிகளும் பதில் அளித்துள்ளனர். ஆனால் அதில் திருப்தி ஏற்படாத அவர்கள் இரு காவல்துறைஅதிகாரிகளையும் கடுமையாக கடிந்து பேசி விட்டு அங்கிருந்து பாளையங்கோட்டை காவல் நிலையம்சென்றனர்.
அப்போது அங்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் இல்லை. அவர்கள் எங்கே என்று தலைமைக்காவலரிடம் விசாரித்துள்ளனர். இருவரும் ரோந்துப் பணியில் இருப்பதாக தலைமைக் காவலர் கூறியுள்ளார்.அதை எழுத்துப் பூர்வமாக தருமாறு நீதிபதிகள் கோரவே அவ்வாறே அவரும் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. அப்பிரிவு கூடுதல் எஸ்.பி. அன்புமணி தலைமையிலான குழு கடந்த 10ம் தேதிநெல்லை வந்து உதவி ஆணையர் மரிய ஜார்ஜ், சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், தலைமைக் காவலர்ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
விசாரணைக்குப் பின்னர் இதுதொடர்பான அறிக்கை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன்அடிப்படையில் இரு நீதிபதிகளும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று காலை இரு நீதிபதிகளும்பணிக்கு வந்திருந்தனர். பிற்பகலில் சஸ்பெண்ட் உத்தரவு அவர்களிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து இருவரும்வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications