ரெளடிகள் வேட்டை தொடரும்: லத்திகா சரண்
சென்னை:சென்னை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படும். தொடர்ந்துஅவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரண் எச்சரித்துள்ளார்.
சென்னையைக் கலக்கி வந்த பிரபல தாதா பங்க் குமார் நேற்று சென்னை அருகேதிருநீர்மலையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது உடல் இன்றுகுரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பங்க் குமார் என்கவுண்டர் குறித்து லத்திகா சரண் கூறுகையில்,ரவுடிகளை சுட்டுக் கொல்ல நாங்கள் நினைக்கவில்லை. அவர்களை உயிருடன்பிடிக்கத்தான் விரும்புகிறோம். இதே பங்க் குமார் 7 முறை குண்டர் சட்டத்தின் கீழ்அடைக்கப்பட்டவன்தான்.
இப்போதும் கூட அவனைப் பிடிக்கத்தான் போலீஸார் முயற்சித்தனர். ஆனால்அவர்களை பங்க் குமார் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீஸார் சுட நேர்ந்தது.இதில் அவன் உயிரிழந்து விட்டான்.
சென்னை நகரில் ரவுடிகள் சுதந்திரமாக நடமாட முடியாது. அதை காவல்துறைஅனுமதிக்காது. தொடர்ந்து ரவுடிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என்றார் லத்திகா சரண்.
இதற்கிடையே, நேற்றைய என்கவுண்டரின்போது தப்பி ஓடி விட்ட பங்க் குமாரின் 3கூட்டாளிகளையும் பிடிக்க போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். விரைவில் அவர்களை பிடிப்போம் என போலீஸார் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications