For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணை: டெல்லியில் 18ம் தேதி அமைச்சர்கள் பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைவருகிற 18ம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில்நடைபெறவுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கேரளஅரசு முன்வரவில்லை. மாறாக தங்களது மாநில சட்டசபையில், அவசரச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துநிறைவேற்றியது.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதன்படி கடந்த 29ம் தேதி டெல்லியில்மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஜோஸ் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர்அச்சுதானந்தனும் சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. அதேசமயம், இரு மாநில அமைச்சர்கள்சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இதுவும் ஜோஸ் முன்னிலையில் டெல்லியில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரு மாநில அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வருகிற 18ம் தேதி டெல்லியில்நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தலைமைப் பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்கிறது.

கேரள அரசின் சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழுபேச்சுவார்த்தைக்கு வரவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து இரு மாநிலமுதல்வர்களும் மீண்டும் சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும்என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.சென்னை:

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைவருகிற 18ம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில்நடைபெறவுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கேரளஅரசு முன்வரவில்லை. மாறாக தங்களது மாநில சட்டசபையில், அவசரச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துநிறைவேற்றியது.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதன்படி கடந்த 29ம் தேதி டெல்லியில்மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஜோஸ் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர்அச்சுதானந்தனும் சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. அதேசமயம், இரு மாநில அமைச்சர்கள்சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இதுவும் ஜோஸ் முன்னிலையில் டெல்லியில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரு மாநில அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வருகிற 18ம் தேதி டெல்லியில்நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தலைமைப் பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்கிறது.

கேரள அரசின் சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழுபேச்சுவார்த்தைக்கு வரவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து இரு மாநிலமுதல்வர்களும் மீண்டும் சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும்என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X