மதுரை: கருணாநிதிக்கு நாளை டாக்டர் பட்டம்
மதுரை:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாளை முதல்வர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்வழங்கப்படுகிறது. இதை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வழங்குகிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 40வது பட்டமளிப்பு விழா நாளை காலை 11 மணிக்கு ராஜா முத்தையாமன்றத்தில் நடக்கிறது. இவ்விழாவுக்கு பர்னாலா தலைமை தாங்குகிறார்.
இதில் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவைக்காக கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதில் என்டிபிசிலிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சங்கரலிங்கம் அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகதுணைவேந்தர் மருதமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நாளை காலை 7.30 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் கருணாநிதி அரசு சுற்றுலா மாளிகைக்குஓய்வெடுத்துவிட்டு ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாமுடிந்ததும் பிற்பகலே சென்னை திரும்புவார்.
ஆளுநர், முதல்வர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விழா பல்கலைக்கழகத்தில் நடக்காமல் ராஜா முத்தையா மன்றத்தில்நடப்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் சென்டிமெண்ட் இருக்கிறதாம்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து போனால் பதவி காலியாகும் உடல் நிலைபாதிக்கப்படும் என ஒரு சென்டிமெண்ட் உண்டு.












Click it and Unblock the Notifications