ஜெ. சொல்வது அப்பட்டமான பொய்-கருணாநிதி
சென்னை:தமிழக அரசின் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதுஅப்பட்டமான பொய் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோது தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல்நிறுத்தப்பட்டு விட்டதாகவும், இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் ஜெயலிலதா கூறியுள்ளதுகுறித்து கேட்டனர்.
அதற்கு கருணாநிதி பதிலளிக்கையில், அந்த அம்மையாரின் கூற்றுக்கு ஏற்கனவே உணவு அமைச்சர் ஏ.வ.வேலுவிளக்கமாக பதிலளித்து விட்டார்.
நானும் இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.அப்போதுதான் அம்மையார் சொன்னது அப்பட்டமான பொய் என்றும், இன்று வரையில் அந்தப் பகுதிகளில்,நெல் கொள்முதல் நடந்து வருகிறது என்றும் குறுவை அறுவடை பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையிலும் கூடதொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார் என்றார்கருணாநிதி.
புதிய அடுக்குமாடி கட்டிடம்:
இதற்கிடையே சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்த சென்னை குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாகக் குடியிருப்புகள் கட்ட கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது இதற்கான வாக்குறுதியை அளித்தார் கருணாநிதி.
அதன்படி மெரீனா நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையில் உள்ள முழுமையாகப் பழுதடைந்த 2,862குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக 2,862 குடியிருப்புகள் கட்டவும்,சுனாமியில் பாதிக்கப்பட்ட 4,458 குடும்பங்களுக்கு புதிதாக அடுக்கு மாடியிருப்புக்கள் ரூ. 128 கோடி செலவில்கட்டித் தரவும் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.