மாப்பிள்ளைகளுக்கு புது மாமியார் வீடு!
சென்னை:சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று முதல் புழல் சிறைக்கு மாற்றும் பணிதொடங்கியுள்ளது.
சென்னை மத்திய சிறையில் பெரும் இட நெருக்கடி நிலவுவதால், சென்னை அருகே புழலில் புதிய மத்திய சிறைகட்டப்பட்டுள்ளது. இந்த சிறையை முதல்வர் கருணாநிதி சமீபத்தில் திறந்து வைத்தார்.
தற்போதைய மத்திய சிறையிலிருந்து கைதிகளை புழல் சிறைக்கு மாற்றும் பணி இன்று தொடங்கியது. மொத்தம்1,810 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை படிப்படியாக கைதிகளை புழல் சிறைக்குக் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 300 கைதிகள் 3 பேருந்துகளில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புடன்கொண்டு செல்லப்படுகின்றனர்.
அதன் பிறகு வரும் கைதிகள் நேரடியாக புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவர். பளபளப்பான புதியசிறைக்குப் போகும் ஆர்வம் கைதிகளின் முகங்களில் காணப்பட்டதை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications