யோபு சரவணனின் சொத்துக்கள் பறிமுதல்
வேலூர்:
வேலூரில் உள்ள போலி பிஷப் யோபு சரவணனின் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சிபிசிஐடிபோலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
வீடு கட்டித் தரும் காண்டிராக்ட் என்ற பெயரில் பல நூறு காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தைசுருட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள யோபு சரவணனை சிபிசிஐடி போலீஸார் தங்களது காவலில் எடுத்துவிசாரித்து வருகின்றனர்.
நேற்று யோபுவை வேலூருக்கு அழைத்துச் சென்று அவருக்குச் சொந்தமான இடங்களுக்குக் கூட்டிச் சென்றுவிசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியில் யோபு மற்றும் அவரது பினாமிகளின் பெயர்களில்இருந்த ரூ. 13 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மனைவி மெர்சி பெயரில் பலவன்சதுக்குப்பம் என்ற இடத்தில் உள்ள 2 வீடுகள், காந்தி நகரில் கல்வாரி மிஷன்அறக்கட்டளை பெயரில் உள்ள வீடு, காட்பாடி பாலாஜி நகரில் உதவியாளர் ராஜேந்திரனின் பெயரில் உள்ள வீடுஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
![]() |
அரியூர் என்ற இடத்தில் யோபுவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சர்ச்சிலும் போலீஸார் சோதனைநடத்தினர். வேலூரில் உள்ள அவரது இருப்பிடத்திலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
போலீஸ் சோதனையில் ஏராளமான புகைப்படங்கள், ஆவணங்கள், ஒரு கார் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.













Click it and Unblock the Notifications