செம்மொழி நிறுவன குழுக்கள் கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:தமிழ் செம்மொழி நிறுவனத்தை நிர்வகிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகிய குழுக்களின் உறுப்பினர்கள் முதல்வர்கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழ் செம்மொழி நிறுவனத்தை மத்திய அரசின் யோசனையின் பேரில் தமிழக அரசுதொடங்கியுள்ளது. இதற்காக முதல்வர் தலைமையில் இரு குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு ஐம்பெருங்குழு, எண்பேராயம் என பெயர்சூட்டப்பட்டுள்ளது.
ஐம்பெருங்குழுவில் அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா, வைரமுத்து, கனிமொழிஆகியோரும், எண்பேராயக் குழுவில் மா. நன்னன், அப்துல் ரகுமான், வேழவேந்தன்,ரவிக்குமார், வா.மு.சேதுராமன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். துணைத்தலைவர்களாக வி.ஐ.சுப்ரமணியன், வா.செ.குழந்தைச்சாமி ஆகியோர்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் குழுக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதியைநேற்று சந்தித்துப் பேசினர். தமிழ் செம்மொழி நிறுவனத்தை தொடங்குவது குறித்தும்,தங்களை உறுப்பினர்களாக நியமித்ததற்கும் முதல்வருக்கு அவர்கள் நன்றிதெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறுகையில், தமிழ் செம்மொழிநிறுவனத்தை எப்படி செயல்படுத்தலாம், எதிர்காலத் திட்டங்கள் குறித்துமுதல்வருடன் ஆலோசித்தோம்.
தேசிய அளவில் சமஸ்கிருத ஆண்டு என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தும் வகையில் தேசிய அளவில்தமிழ் ஆண்டையும் அறிவிக்க வேண்டும் என்பது பற்றியும் இக்கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications