சென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து சென்னையில்நடைபெறவுள்ள உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சம்மேளநம் சார்பில் சென்னையில் இரண்டுநாள் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. 17 மற்றும் 18 ஆகிய இருநாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

இந்த மாநாட்டில், தகவல் தொழில்நுட்பத்தின் நவீன வசதிகளைப் பயன்படுத்திதமிழை எப்படி கற்பிப்பது, கற்றுக் கொள்வது என்பது குறித்து விரிவாகவிவாதிக்கப்படவுள்ளதாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காகிதமே இல்லாத கல்விஇன்னும் பத்து அல்லது 12 ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்து விடும். எனவேகற்பிப்பதிலும் நவீன அறிவை ஆசிரியர்கள் பெற வேண்டியது அவசியமாகிறது.

இந்த மாநாட்டில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்டபல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 தமிழாசிரியர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டபிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சம்மேளனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்க்களம் இணைய தளம் மூலம்உலகம் முழுவதும் 25,000 பேருக்கு தமிழ் கற்றுத் தரப்பட்டுள்ளது என்றார் ஈஸ்வரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+