திருச்சியில் இன்று பெரியார் சிலை திறப்பு
திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று பெரியார் சிலை திறப்பு விழா நடைபெறுவதையொட்டி திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ் பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் ராஜகோபுரம் அருகே திராவிடர் கழகம் சார்பில்பெரியார் சிலை மைக்கப்பட்டது. இந்த சிலை கடந்த 9ம் தேதி நடப்பதாக இருந்தது.
ஆனால் அதற்கு முதல் நாள் சிலையின் தலையை சில விஷமிகள் தகர்த்து விட்டனர். இதனால் பெரும் பரபரப்புஏற்பட்டது. பெரியார் சிலை தகர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் மீது தாக்குதல்நடந்தது.
இந்த நிலையில் அதே இடத்தில் உட்கார்ந்த நிலையில் பெரியாரின் புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதிறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
மத்திய அமைச்சர் ராசா, மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு. செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்நிகழ்ச்சியில் தி.க. தலைவர் கி.வீரமணி சிலையை திறந்து வைக்கிறார்.
பெரியார் சிலை தொடர்பாக பெரும் சர்ச்சை நிலவி வருவதாலும், இந்து மக்கள் கட்சி, பாஜக, இந்து முன்னணிஆகியவை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருவதாலும், சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரில் நேற்று முன் தினம் இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர்சங்கர் ஜீவால் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சியில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. விடுதிகளில்சோதனையும் போடப்பட்டது. தங்கியிருப்பவர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன. நகர எல்லைகளில்சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சிலைகளுக்கு பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. இந்துக் கோவில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.