For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மத்திய சிறை மூடப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:169 ஆண்டு பழமை வாய்ந்த சென்னை மத்திய சிறைச்சாலை நேற்று மாலை 6மணியுடன் மூடப்படுகிறது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே கூவம் நதிக்கரையோரம் இருக்கிறதுசென்னை மத்திய சிறை. கடந்த 1837ம் ஆண்டு இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது.இங்கு 2000 கைதிகள் வரை தங்க வைக்க முடியும்.

மாநகரின் வளர்ச்சியால் சென்னை மத்திய சிறை மிகவும் பழமை வாய்ந்த,நெருக்கடியான ஒரு கட்டட வளாகமாக மாறிப் போனது. கட்டடம் மிகவும் பழையதுஎன்பதாலும், கைதிகளை அடைத்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னைக்கு அருகே புழல் பகுதியில் அதி நவீன சிறைச்சாலைகட்டப்பட்டது. சமீபத்தில் இந்த புதிய சிறையை முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை மத்திய சிறையில் இருந்த கைதிகளை புழல் சிறைக்குமாற்றும் நடவடிக்கை தொடங்கியது. பெரும்பாலான கைதிகள் புழலுக்கு மாறி விட்டநிலையில் நேற்று அல் உம்மா கைதிகள் உள்பட 1000 கைதிகள் புழலுக்குமாற்றப்பட்டனர்.

புதிய சிறைக்கு போகும் சந்தோஷத்தை கைதிகள் முகத்தில் பார்க்க முடிந்தது. நேற்றுமாலை 5 மணிக்குள் அனைத்துக் கைதிகளும் புழலுக்கு மாற்றப்படுவர். அதன் பின்னர்6 மணிக்கு சென்னை மத்தியச் சிறைச்சாலை மூடப்பட்டு விடும்.

169 ஆண்டுகளாக கைதிகளைத் தாங்கி வந்த இந்த பழமையான சிறைச்சாலை நேற்றுமாலையுடன் தனது சேவையை முடித்துக் கொள்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X