வைரமுத்து நூல்: கருணாநிதி வெளியிடுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:கவிஞர் வைரமுத்து தொடராக எழுதிய கருவாச்சி காவியம் நூல் வடிவம் பெற்றுஇன்று வெளியிடப்படுகிறது. முதல்வர் கருணாநிதி நூலின் முதல் பிரதியைவெளியிடுகிறார்.
கருவாச்சி காவியம் என்ற பெயரில் வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடராக எழுதிவந்தார் வைரமுத்து. இது தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்த நூல் வெளியீட்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை வெளியிடுகிறார்.உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நூலைப் பெற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில் பேராசி>யர் சாரதா நம்பி ஆரூரன், குன்றக்குடி பொன்னம்பலஅடிகளார், முத்தையா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகிறார்கள். வைரமுத்து ஏற்புரைநிகழ்த்துகிறார். வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து நிகழ்ச்சியை தொகுத்துவழங்குகிறார்.












Click it and Unblock the Notifications