For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சச்சின் நன்கு விளையாட காசியில் யாகம்!

By Staff
Google Oneindia Tamil News

வாரணாசி:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின்டெண்டுல்கர் மற்றும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாட அருள் புரிய வேண்டும்என்று கோரி காசியில் கிரிக்கெட் ரசிகர்கள் யாகம் வளர்த்து கடவுளை வேண்டிக்கொண்டனர்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.ஒரு நாள் தொடரை கேவலமாக இழந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும்இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களுடன் தடுமாற்றமானநிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறிப்பாக டெண்டுல்கர் சிறப்பாகவிளையாட வேண்டும் என வேண்டி வாரணாசியைச் சேர்ந்த குருகுல மாணவர்கள் 5பேர் அனுமனுக்கு யாகம் வளர்த்து வேண்டிக் கொண்டனர்.

வாரணாசியைச் சேர்ந்த ஜாகிரிதி பவுண்டேஷன் என்ற நிறுவனம் இந்த யாகத்திற்குஏற்பாடு செய்திருந்தது. காசியில் உள்ள புஷ்கர் குளம் அருகே இந்த யாகம் நடந்தது.

வேத மந்திரங்கள் முழங்க நடந்த யாகத்தின்போது சச்சின் டெண்டுல்கர் இழந்த தனதுபலத்தை மீண்டும் பெற்று இந்திய அணிக்கு வெற்றித் தேடித் தர வேண்டும் எனவேண்டிக் கொள்ளப்பட்டது.

அதேபோல, டெண்டுல்கரோடு மற்ற வீரர்களுக்கும் அனுமன் அருள் பாலித்துசிறப்பாக விளையாட வைக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்ளப்பட்டது.

அனுமனின் அருட்பார்வை டெண்டுல்கர் மீது நிச்சயம் படும். டெண்டுல்கர் மறுபடியும்முன்பு போலவே சிறப்பாக விளையாடி இந்தியாவின் மானத்தைக் காப்பார்.அதேபோல ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி ஆகியோரும் சிறப்பாக விளையாடஅனுமன் அருள் தருவார் என்று யாகம் செய்த ஐந்து குருகுல மாணவர்களும்தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X