பெரியாறு: இன்று டெல்லியில் அமைச்சர்கள் பேச்சு
சென்னை:முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக டெல்லியில் தமிழக, கேரள அமைச்சர்கள் மட்டத்திலானபேச்சவார்த்தை இன்று நடைபெறுகிறது.
பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களிடையே டெல்லியில் மத்திய நீர்வளத்தறைஅமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து இரு மாநில அமைச்சர்கள் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய அமைச்சர்சைபுதீன் ஜோஸ் முன்னிலையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள நீர்ப்பாசனத் துறைஅமைச்சர் பிரேமச்சந்திரன் ஆகியோர் இன்று டெல்லியில் பேச்சு நடத்தவுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் இரு மாநில தலைமைப் பொறியாளர்களும் கலந்து கொள்கின்றனர்.இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் எனஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதால் இப்பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications