ரயில் நிலையத்தில் துணிகர முகமூடிக் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இரணியல் ரயில் நிலையத்திற்குள் புகுந்த முகமூடிக் கும்பல்,அங்கிருந்த அதிகாரி, பெண் ஊழியரைக் கட்டிப் போட்டு விட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

இரணியல் ரயில் நிலையத்தில் இரவுப் பணியில் நிலைய அதிகாரி சையத் இப்ராகிம், துப்புறவு ஊழியர்வசந்தகுமாரி ஆகியோர் பணியில் இருந்தனர்.

அப்போது நள்ளிரவு பனிரெண்டரை மணியளவில் 8 பேர் அடங்கிய முகமூடி அணிந்த கும்பல் அங்கு வந்தது.இப்ராகிமையும், வசந்தகுமாரியையும் கட்டிப் போட்ட அக்கும்பல் ரயில் நிலையத்தில் இருந்த டிக்கெட் வசூல்பணம் 10 ஆயிரத்து 300 ரூபாயை எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த அலமாரி, பீரோ, பெட்டிகளை அடித்து உடைத்தனர். பின்னர் வசந்தகுமாரி கழுத்தில் கிடந்த 3பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

சிறிது நேரம் கழித்து தண்டவாளப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கு வந்தனர்.அதிகாரியும், பெண் ஊழியரும் கட்டிப் போடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள்இருவரையும் அவிழ்த்து விட்டனர்.

பின்னர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அதிகாரி இப்ராகிமிடம் நடந்ததுகுறித்து கேட்டறிந்தனர். கொள்ளைக் கும்பலில் இருந்தவர்கள் மலையாளம் கலந்த தமிழில் பேசியதாக இப்ராகிம்தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். நாலாபுற.ம் கொள்ளையர்களைப் பிடிக்க வலைவீசப்பட்டது. இந்த நிலையில் இரணியலிலிருந்து நாகர்கோவில் திசையில் செல்லும் தண்டவாளத்தில் ஒரு கும்பல்போய்க் கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். பார்வதிபுரம் என்ற இடத்தில் ஒரு கும்பல் போய்க் கொண்டிருந்ததுதெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் விரட்டினர். இதையடுத்து அக்கும்பல் அங்கிருந்து ஓடத்தொடங்கியது. போலீஸாரும் துரத்திச் சென்றனர்.

இதில் ஒருவன் மட்டும் பிடிபட்டான். அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தஅணீஸ் என்பது தெரிய வந்தது. இரணியல் ரயில் நிலையத்தில் கொள்ளை அடித்ததை அணீஸ் ஒப்புக்கொண்டான்.

கொள்ளைக்கூட்டத்தில் இருந்தவர்களில் 3 பேர் திருவனந்தபுரம் களக்கூட்டம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்என்றும் மற்ற நான்கு பேரும் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அணீஸ் தகவல் கொடுத்தான்.

தப்பி ஓடி விட்ட மற்ற 7 பேரையும் பிடிக்க போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+