For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாலிபருக்கு அடி,உதை: யுவராஜ் சிங் மீது புகார்

By Staff
Google Oneindia Tamil News

சண்டிகர்:கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது குடிபோதையில் வாலிபரை அடித்து உதைத்ததாக புகார் எழுந்துள்ளது. அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை. அவர்ஓய்வில் இருந்து வருவதாக கூறப்பட்டது.

சமீபத்தில் தனது 26வது பிறந்த நாளை யுவராஜ் சிங் கொண்டாடினார். இதையொட்டி அவரது வீட்டில்பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பார்ட்டியின்போது ஒரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின்போது யுவராஜ் சித்தார்த்என்பவர் அடித்து உதைக்கப்பட்டார். அவரை யுவராஜ் சிங்தான் அடித்ததாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக யுவராஜ் சிங் தரப்பிலும், சித்தார்த் தரப்பிலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.போலீஸார் இரு தரப்பு புகார்களையும் வாங்கிக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சித்தார்த்தின் தாயார் யுவராஜ் சிங் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில்மனு செய்துள்ளார். அதில் தனது மகனை யுவராஜ் சிங் அடித்து உதைத்தார். இதனால் எனது மகன்காயமடைந்துள்ளார், யுவராஜ் சிங்கால் ஆபத்து ஏற்படுமோ என பயந்து போயுள்ளார்.

யுவராஜ் சிங் மீது போலீஸில் புகார் கொடுத்தும் போலீஸார் அதை கண்டுகொள்ளவில்லை. எனவே யுவராஜ் சிங்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் கொலை வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு தண்டனை தரப்பட்டது. இந்த நிலையில்,அதே பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் மீது அடிதடி சர்ச்சை எழுந்துள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X