For Daily Alerts
Just In
மாறன் குறித்து அவதூறு: அதிமுக பேச்சாளர் கைது
சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் குறித்து அவதூறாகப் பேசியதாக அதிமுக தலைமை நிலையபேச்சாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டார்.
சிவகாசியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். சமீபத்தில் சென்னையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் முரசொலிமாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும், மாறன் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டிருப்பதுகுறித்தும் அவதூறாகப் பேசியதாக கலைச்செல்வன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று சிவகாசிக்கு சென்ற போலீஸ் படை அங்குள்ள அவரது வீட்டில் வைத்து கலைச்செல்வனைக்கைது செய்தது. உடனடியாக அவர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திஅவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
Comments
Story first published: Wednesday, December 13, 2006, 5:30 [IST]