முதல் சோதனையில் இந்தியா அபார வெற்றி
ஜோஹன்னஸ்பர்க்:தென் ஆப்பிரிக்காவுடனான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 123ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட்டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில்நடந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை எடுத்தது. முதல்இன்னிங்ஸில் முன்னணி வீரர்கள் சரிவைச் சந்தித்தபோது கங்குலியின் அபாரஆட்டத்தால் இந்தியா 249 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது.ஆனால் ஸ்ரீசந்தின் அணல் பறக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 84 ரன்களில்சுருண்டது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிதென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளித்து 236 ரன்களை எடுத்தது.
இதன் மூலம் 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை தென்ஆப்பிரிக்காவுக்கு இந்தியா நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸைப் போலவே 2வதுஇன்னிங்ஸிலும் ஸ்ரீசந்த் அபாரமாக பந்து வீசினார். இதனால் தென் ஆப்பிரிக்கவீரர்கள் ரன் எடுக்கத் தடுமாறினர். 3வது நாள் ஆட்ட நேர இறுதியில், தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்த நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று கும்ப்ளேவின் சுழல்பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா சிக்கிக் கொண்டது. அதோடு ஜாகிர்கானின் வேகப்பந்துவீச்சும் சேர தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரன் குவிக்கத் திணறினர்.
இளம் வீரர் பிரின்ஸ் மட்டும் சரிவை சமாளித்து சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்துகும்ப்ளே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷான் பொல்லாக் சிறப்பாக ஆடி 40 ரன்களைசேர்த்தார்.
இறுதியில் 278 ரன்களை எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட் ஆகிதோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரவெற்றியைப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையை எட்டியது.
ஸ்ரீசந்த், கும்ப்ளே, ஜாகிர்கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல்டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளைவீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசந்த் ஆட்ட நாயகனாகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட நகரங்களில்ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications