அணு ஆயுதங்கள் அழிய வேண்டும்: கலாம்
பெங்களூரூ:உலகம் முழுவதும் வல்லரசு நாடுகளால் தயாரித்து, குவிக்கப்பட்டு வரும் அணு ஆயுதங்கள் அனைத்தும்குறைந்து, பயன்பாடற்றுப் போக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சுட்டூர் மடத்தை நிறுவிய ஸ்ரீ சிவராத்ரீஸ்வர பகவத்பாதருவின் 1047வது ஜெயந்தி விழாபெங்களூரூரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு கலாம் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலாம் பேசுகையில், ஆச்சார்யா மகாபிரக்யான்ஜி என்னிடம் ஒருமுறை சொன்னதை இப்போதுஉங்களுக்குச் சொல்கிறேன். அவர் சொன்னதையே எனது வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளேன்.
ஆச்சார்யா சொன்னது இதுதான்: நமது நாடு இப்போது அணு சக்தி நாடு என்பது தெரியும். நீங்களும், உங்களதுகுழுவும் சேர்ந்து சாதித்ததை விட உங்களது லட்சியம் மிகப் பெரியது என்பதை நான் அறிவேன். இதுவரைமனிதகுலம் செய்திராத சாதனையை விட அது பெரியது.
உலகம் முழுவதும் அணு ஆயுதத் தயாரிப்பு மும்முரமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் அணுஆயுதங்களை தயாரித்துக் குவித்து வருகிறார்கள்.
அனைத்துக் கடவுள்களின் ஆசியுடன் நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம், இந்த ஆயுதங்கள்அனைத்தும் செயலிழந்து போகும் வழியை நீங்கள் காண வேண்டும். இந்த ஆயுதங்கள் அனைத்தும் பயனற்றுப்போக வேண்டும், முக்கியத்துவம் இல்லாது புறக்கணிக்கப்பட வேண்டும். அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றுஎன்னிடம் கூறினார் ஆச்சார்யா.
அவர் சொன்னதைத்தான் இப்போது எனது லட்சியமாக நான் எடுத்துக் கொண்டுள்ளேன் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications