திமுக கூட்டணியில் மாற்றம் வராது: நல்லகண்ணு
திருச்சி:தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் மாற்றம் வரும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது போலஎதுவும் நடக்காது. திமுக கூட்டணியில் மாற்றம் வராது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுஉறுப்பினர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மாற்றம்ஏற்படும், கூட்டணிகள் மாறும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். இது அவரது சொந்தக் கருத்து.
என்னைப் பொருத்தவரையில் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. திமுக கூட்டணியில் மாற்றம் வராது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிக்கும்.
பெரியார் சிலை உடைப்பும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.இத்துடன் இப்பிரச்சினை முடியட்டும். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முன்வரவேண்டும். இரு மாநில அரசுகளும் இதுதொடர்பாக சுமூகமாக பேசித் தீர்வு காண வேண்டும். கேரள அரசு இதைபெரிதுபடுத்தி சிக்கலாக்குகிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு நதிகளை தேசியமயமாக்குவதே சரியானதீர்வாக இருக்க முடியும்.
பொருட்களை பதுக்கி வைப்பவர்களால்தான் விலைவாசி உயருகிறது. எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும். அதற்கு பொருளாதார கொள்கையில் தகுந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய அளவில் மீண்டும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்நல்லகண்ணு.