For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்க் குமார் அண்ணனிடம் திடீர் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை அருகே சுட்டுக் கொல்லப்பட்ட பங்க் குமாரின் அண்ணன் பாஸ்கரிடம் போலீஸார் துருவித் துருவிவிசாரணை நடத்தியுள்ளனர்.

தென் சென்னையைக் கலக்கி வந்த பங்க் குமார் சமீபத்தில் சென்னை அருகே திருநீர்மலை பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டான். தங்களைத் தாக்க வந்ததால் தற்காப்புக்காக பங்க் குமாரை சுட்டுக் கொன்றதாக போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் சம்பவம் நடந்த அன்று காலை பெங்களூரில் வைத்து பங்க் குமாரை போலீஸார் வளைத்துப் பிடித்துவிட்டதாகவும், அன்று முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில்தான் குமார் இருந்ததாகவும், திட்டமிட்டே போலீஸார்அவனை சுட்டுக் கொன்று விட்டதாகவும் அவனது தாயாரும், மனைவியும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே பங்க் குமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டபோது அதை குமாரின் ஆட்கள் வீடியோவில் பதிவுசெய்து வைத்துள்ளதாக தற்போது திடீர் தகவல் கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்கபங்க் குமாரின் அண்ணன் பாஸ்கரை போலீஸார் இன்று அழைத்து விசாரித்தனர்.

பாஸ்கர் அதிமுகவைச் சேர்ந்தவர். அவரிடம் பங்க் குமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டபோதுஎடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஆதாரம் குறித்து போலீஸார் விசாரித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த விசாரணை தொடர்பாக போலீஸார் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும்வெளியிடவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X