For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுமத்ராவை உலுக்கிய பூகம்பம்-4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்தா:இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களால் அங்கு பெரும் சேதம்ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.10 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவாகியது. இதன் மையம், பண்டா ஏஸ் பகுதியிலிருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில்இருந்தது.

இதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் 5.7 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுபதாங் என்ற நகரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் கடலில் மையம் கொண்டிருந்தது.

3வது நிலநடுக்கம் வடக்கு சுமத்ராவில் காலை 8.24 மணிக்கு ஏற்பட்டது. இதன் அளவு 5.5 ரிக்டராக இருந்தது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை விரிவான தகவல்கள் இல்லை.இருப்பினும் மேற்கு சுமத்ராவில் முவாரோ சிபாங்கி என்ற நகரில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X