பெரியாறு: நடைபயணம் தொடங்கினார் வைகோ
மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி மதிமுக தொண்டர்கள் புடைசூழ அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை மதுரையிலிருந்து நடைபயணத்தைத்தொடங்கினார்.
காவிரிப் பிரச்சினையின்போது காணப்படாத எழுச்சியும், வேகமும் தற்போது முல்லைப் பெரியாறு விஷயத்தில்தமிழக விவசாயிகளிடம் எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் கேரள அரசின் பிடிவாதப் போக்கைக் கண்டித்துபொருளாதாரத் தடைப் போராட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்த நடைபயணம்மேற்கொள்ளப் போவதாக வைகோ அறிவித்தார்.
அதன்படி இன்று காலை மதுரையிலிருந்து தனது பெரியாறு: நடைபயணம் தொடங்கினார் வைகோ. மதுரை வண்டியூர்மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகிலிருந்து காலை 10 மணிக்கு நடைபயணம் தொடங்கியது.
மதிமுக தொண்டர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பெருமளவில் திரண்டு நடைபயணத்திற்காக வந்தவைகோவை வரவேற்றனர். மாவட்ட மதிமுக தலைவர் பூமிநாதன் தலைமையில் தாரை , தப்பட்டை முழங்கவரவேர்பு கொடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வந்து வைகோவின் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துதெரிவித்தார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ தனது நடைபயணத்தைத்தொடங்கினார் வைகோ.
வெயிலையும் பொருட்படுத்தாமல் காமராஜர் சாலை, தெற்கு மாசி வீதி, மேமாசி வீதி, புது ஜெயில் சாலை,காளவாசல் வழியாக கோச்டைக்குச் சென்ற வைகோ அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு நாகமலைப்புதுக்கோட்டைக்குக் கிளம்பினார்.
இன்று இரவு செக்கானூரணியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசுகிறார். வைகோ செல்லும்வழியெங்கும் மதிமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
23ம் தேதி தனது நடைபயணத்தை கூடலூரில் முடிக்கும் வைகோ அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார்.












Click it and Unblock the Notifications