திமுக ஆதரவில் தலைவரான அதிமுக கவுன்சிலர்!!!
தேனி:தேனி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ரமாதேவி, திமுக கவுன்சிலர்களின்ஆதரவுடன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேனி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டது. இங்குமொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில் 6 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். 3 பேர் அதிமுகவினர்.மதிமுகவுக்கு ஒரு கவுன்சிலர் உள்ளார்.
திமுக கவுன்சிலர்களில் யாரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் இல்லை என்பதால் தலைவர் பதவிக்கான தேர்தலைநடத்த திமுக தரப்பு ஒத்துழைப்பு தராமல் தேர்தலை புறக்கணித்து வந்தது. இதனால் 3 முறை தேர்தல் நடத்தஏற்பாடு செய்தும் தேர்தலை நடத்த முடியவில்லை.
இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கவுன்சிலர் ஒருவர் தலைவராவதற்கு திமுக ஒத்துழைக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் முதல்வர் கருணாநிதியை நேரில்சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்ற முதல்வர் கருணாநிதியும், தாழ்த்தப்பட்ட ஒருவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கில்கட்சி பாகுபாடின்றி அதிமுகவுக்கு திமுக ஆதரவு தரும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து இன்று தேர்தல் நடந்தது. அதில் அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ரமாதேவி ஒருமனதாகதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல 3 முறை ஒத்திவைக்கப்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலும் இன்று நடந்தது.இதில் சமீபத்தில் அதிமுகவிலிருந்து தாவி பாமகவில் இணைந்த வெங்கடேசன் தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications