துரோகம் செய்த ஜெ: கராத்தே பாய்ச்சல்
திருத்துறைப்பூண்டி:என் தாயார் இறுதி சடங்கில்கூட கலந்து கொள்ள விடாமல் துரோகம் செய்தவர்ஜெயலலிதா என சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தேதியாகராஜன் கூறினார்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ரொக்கக் குத்தகை கிராமத்தில் தனது தாயார்நினைவு நாளில் கலந்து கொண்ட கராத்தே தியாகராஜன் பின்னர் கண் கலங்கியபடிநிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு எனது தாயார் பாலச்சந்திரா இறந்தபோது இறுதி காரியங்களில் கூடகலந்து கொள்ள முடியாத அளவு தடுத்து போலீஸாரை ஏவி விட்டார் ஜெயலலிதா.
போலீஸை வைத்து உறவினர்களை அழக் கூட விடாமல் கொடுமை செய்தவர்ஜெயலலிதா.
எனது தந்தை ரகுபதி சென்னையில் இறந்தபோது சாதாரண தொண்டர்களுக்குதெரிவிக்கும் இரங்கலைக்கூட ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. கட்சிக்காரர்களைக்கூட துக்கத்துக்கு செல்லக்கூடாது என தடுத்தார்.
நான் காங்கிரஸில் செல்வாக்குடன் இருப்பதை அறிந்த ஜெயலலிதா, அவராகவே தான்என்னை அழைத்து பொறுப்பு மேயராக்கினார்.
திறந்த வெளி சிறைச்சாலையில் இருக்கும் ஊமைகள் போலத் தான் அதிமுகவின் பலதலைவர்கள் இருக்கின்றனர். தங்கள் செயல்பாட்டை எல்லாம் ஜெயலலிதா முடக்கிவிட்டதாக எண்ணி வருத்தத்தில் இருக்கும் அவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என்றார் கராத்தே.












Click it and Unblock the Notifications