ஷேர் ஆட்டோ-பஸ் மோதலில் 4பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:பெரம்பலூரில் ஷேர் ஆட்டோவும் பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 3 பேர்படுகாயம் அடைந்தனர்.
பெரும்பலூர் அருகே கல்பாடி அகரம் கிரமாத்தில் இருந்து இன்று காலை ஒரு ஷேர் ஆட்டோ பெரம்பலூர்நோக்கி சென்று கொண்டு இருந்தது. ஷேர் ஆட்டோ துரைமங்கலம் ஏரி கரை அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்ற போது ஷேர் ஆட்டோ எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாகமோதியது.
இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த தமிழ்செல்வி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தமிழ் செல்வியின் தாயார்மாணிக்கம், நதியா (20), தனலட்சுமி (35) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications