மாணவன் கையை அடித்து ஒடித்த வார்டன்
திருவண்ணாமலை:பரீட்சையில் பெயில் ஆனதால் 8வது வகுப்பு மாணவனை, விடுதி வார்டன் பிரம்பால் அடித்ததில் அந்தமாணவின் கை ஒடிந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் பவித்ரம் என்ற ஊரில் உள்ள புனித சகாய மாதா உயர் நிலைப்பள்ளியில் 8வதுவகுப்பு படித்து வருபவர் மணிமாறன். பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
14 வயதாகும் மணிமாறன் சமீபத்தில் நடந்த பரீட்சையில் தோல்வியுற்றார். இதையடுத்து கோபமடைந்த விடுதிவார்டன் பிரேம்குமார் சில நாட்களுக்கு முன்பு பிரம்பால் சரமாரியாக மணிமாறனை அடித்துள்ளார்.
இதனால் வலி பொறுக்க முடியாமல் துடித்துள்ளார் மணிமாறன். உடனடியாக மணிமாறனுடன் படிக்கும் பிறமாணவர்கள், மணிமாறனின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மணிமாறனின் தந்தை வேலு, தாயார் காந்தாயி ஆகியோர் சென்னையிலிருந்து விரைந்தனர்.மணிமாறனை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிறுவனின் கை ஒடிந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது மணிமாறனுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. மணிமாறனை விடுதி வார்டன் அடிப்பது புதிதல்ல என்றும் அடிக்கடி இவ்வாறுஅடிப்பார் என்றும் மணிமாறனின் பெற்றோர்கள் குமுறலோடு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications