கேரளாவைக் கண்டித்து அரண்மனை முற்றுகை
தக்கலை:கேரள அரசைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளபத்மநாபபுரம் அரண்மனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 2எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.
பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குபார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு உள்ளே சென்று பார்வையிட ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் இதை 50 ரூபாயாககேரள அரசு உயர்த்தி விட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தக்கலை பேருந்து நிலையம் அருகே நேற்றுமாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் தலைமையில் போராட்டக் கூட்டம் நடந்தது.இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெயபால், ஜான் ஜேக்கப் உள்ளிட்டநூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் ஊர்வலமாக அரண்மனை நோக்கிக் கிளம்பினர். ஆனால்அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்து பின்னர்மாலையில் விடுவித்தனர்.
இருப்பினும் கேரள அரசு கட்டணத்தைக் குறைக்கும் வரை தொடர்ந்து போராடப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். போராட்டத்தைத் தொடர்ந்துஅரண்மனை முன்பு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications