ஜன. 27ல் பவார் கட்சியில் திண்டிவனம் ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், திண்டிவனம் ராமமூர்த்தியின் தமிழ்நாடுஜனநாயக காங்கிரஸ் கட்சியை இணைக்கும் விழா ஜனவரி 27ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தஞ்சையில் திண்டிவனம் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சையில் ஜனவரி 27ம்தேதி நடைபெறும் மாபெரும் மாநாட்டில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், தமிழ்நாடு ஜனநாயககாங்கிரஸ் கட்சி இணைக்கப்படுகிறது.

இந்த விழாவில் காங்கிரஸ் மீது அதிருப்தியுடன் இருப்பவர்கள் கலந்து கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில்இணைய வேண்டும். இணைப்பு விழாவில் மத்திய அமைச்சர் பிரபுல் படேல், முன்னாள் கேரள முதல்வர்கருணாகரன், எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர் என்றார் ராமமூர்த்தி.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவை நம்பி காங்கிரஸை விட்டு விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார்திண்டிவனம். ஆனால், அவருக்கு ஒரே ஒரு சீட் தருவதாக ஜெயலலிதா கூறி அரசியல் அதிர்ச்சி தந்தார்.கட்சியையும் ஆரம்பித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார் திண்டிவனம். இப்போதுகட்சியை பவார் கட்சியுடன் இணைத்துவிட்டு நிம்மதியாக நடையைக் கட்ட முடிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+