For Quick Alerts
For Daily Alerts
Just In
விமான டயர் வெடிப்பு-இந்திய பயணிகள் தவிப்பு
துபாய்:சார்ஜாவிலிருந்து கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால், அதில் பயணம்செய்யவிருந்த 170 பயணிகளும் இந்தியா திரும்ப முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
சார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு 170 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் கிளம்பத் தயாராக இருந்தது.ஆனால் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததால் விமானம் கிளம்புவது தடைபட்டது.
ஆனால் விமானத்தை சரி செய்ய கால தாமதமாகியதால் நேற்றிலிருந்து விமான நிலையத்திலேயே 170பயணிகளும் தவிப்புடன் காத்துள்ளனர். விமானம் இன்று பிற்பகல் கிளம்பக் கூடும் என ஏர் இந்தியா அதிகாரிகள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உணவு உள்ளிட்டவைவழங்கப்பட்டன. அவர்களை ஹோட்டலில் தங்க வைக்க உரிய அனுமதி கிடைக்காததால் விமானநிலையத்திலேயே பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, December 13, 2006, 5:30 [IST]