சென்னை: பீரோ புல்லிங்-50 பவுன் கொள்ளை
சென்னை:சென்னை திருவான்மியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியின் வீட்டில் கொள்ளையர்கள் 50 பவுன் தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பினர்.
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சகுந்தலா. இவரது வீடு திருவான்மியூரில்உள்ளது. இவரது வீடு இரண்டு தளங்களைக் கொண்டது.
நேற்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் முதல் தளத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலை கீழ்தளத்திற்கு வந்தபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டது கண்டு திடுக்கிட்டனர். இரும்பு பீரோ ஜன்னலுக்குஅருகே நகர்த்தப்பட்டு, உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை சிலர் திருடிச் சென்றிருந்ததுதெரிய வந்தது.
புறநகர்ப் பகுதிகளான மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைக் கலக்கி வரும் பீரோ புல்லிங்கொள்ளைச் சம்பவம் போல இதுவும் நடந்திருப்பதால் திருவான்மியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் பீரோ புல்லிங் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் கடுமையாகதிணறி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்திரா திருவான்மியூர் பகுதியிலும்இப்படிப்பட்ட கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது போலீஸாருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications