ஓடும் பஸ்சில் டிரைவர் சாவு- பஸ் கவிழ்ந்தது

Subscribe to Oneindia Tamil

சேலம்:சேலத்தில் ஓடிக் கொண்டிருந்த பஸ்சின் டிரைவர் திடீரென மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து கட்டுப்பாட்டைஇழந்த பஸ் ஏரியில் பாய்ந்து கவிழந்ததில் 3 பெண் பயணிகள் படுகாயமடைந்தனர்.


சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மல்லூருக்கு இன்று காலை தனியார் டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.அதை சந்திரமோக் (40) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். பஸ்சில் 23 பேர் இருந்தனர்.

அம்மா பாளையம் என்ற இடத்தில் ஏரிக் கரையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனர் சந்திரமோகனுக்குதிடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து வலியால் துடித்த அவர், மார்பை பிடித்தபடி ஒரு கையால்பஸ்ஸை ஓட்டினார்.

இதைப் பார்த்த கண்டக்டர் டிரைவரிடம் ஓடினார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறிய சந்திரமோகன்,உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும், மருத்துவமனைக்கு பஸ்ஸை ஓட்டுகிறேன் என்று கூறியபடி பஸ்ஸைஇயக்கினார்.

பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்டிரிங் வீலிலேயே சரிந்து விழுந்தார்சந்திரமோகன். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்தது.

இதைப் பார்த்த கண்டக்டரும் சில பயணிகளும் அலறியபடி ஸ்டியரிங் வீலை பிடித்து திருப்ப முயற்சித்தனர். சிலர்பிரேக்கை மிதிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் ஏரிக்குள் பாய்ந்த பஸ் கவிழ்ந்தது. இதில் 3 பெண் பயணிகள்படுகாயமடைந்தனர்.

பஸ்சின் முன் பகுதி ஏரி தண்ணீருக்குள் விழுந்தது. ஆனால் பின் பாதி தரையில் இருந்தது. இதனால் பின் பக்கம்வழியாக பயணிகள் அனைவரும் வெளியில் குதித்து தப்பினர்.

மயங்கி விழுந்த டிரைவர் சந்திரமோகனை பயணிகள் மீட்டபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. அவரதுஉடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சில நாட்களுக்கு முன் சென்னையில் பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவர்பஸ்ஸை நிறுத்திவிட்டு மயங்கி பலியானதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+