கேட்டை தாண்ட முயன்று இறந்த புள்ளி மான்
சென்னை:சென்னை கிழக்கு தாம்பரத்தில், வங்கி அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த புள்ளி மான், வீட்டு இரும்புகேட்டை தாண்ட முயன்று, கம்பி குத்தி துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.
தாம்பரம் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து ஒரு புள்ளி மான் கிழக்குத் தாம்பரம் பகுதியில் நேற்று இரவு இரைதேடி ஊடுறுவியது. அங்கு உள்ள வங்கி அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் நுழைவதற்காக சுற்றுச் சுவர் மீது தாவிக்குதிக்க முயன்றது.
ஆனால் சுவர் மீது ஏற முடியாததால், வீட்டின் முன் வாசலில் இருந்த இரும்புக் கேட்டைத் தாண்டி செல்லமுயன்றது. ஆனால் கேட் உயரமாக இருந்ததால், முழுமையாக தாண்ட முடியாமல் இரும்புக் கம்பியில் சிக்கிக்கொண்டது.
இதனால் மானின் வயிற்றுப் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. சில நிமிடங்களில் அந்த மான் பரிதாபமாகதுடிதுடித்து உயிரிழந்தது. இன்று காலை வங்கி அதிகாரியின் குடும்பத்தினர் வீட்டுக்கு வெளியே வந்தபோதுஉயிரிழந்து கிடந்த மானைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
அவர்கள் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டனர். பின்னர் தாம்பரம் நகராட்சி கவுன்சிலர்கலைச்செல்வி ஜோதிக்குமாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் போலீஸாருக்கும், வனத்துறையினருக்கும்தகவல் தெரிவித்தார்.
போலீஸாரும், வனத்துறையினரும் விரைந்து வந்து இறந்த மானின் உடலை மீட்டனர். அந்த மானுக்கு 7 வயதுஇருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மானின் எடை 55 கிலோவாக இருந்தது.
இறந்த மானின் உடலில் அங்கேயே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் புதைப்பதற்காகவனத்துறையினர் மானை எடுத்துச் சென்றனர். இரும்புக் கேட்டில் சிக்கி மான் பரிதாபமாக உயிரிழந்ததுஅப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.