மதீனாவில் நுழைந்த இந்தியர் தலை தப்பியது
துபாய்:மதீனா நகரில், முஸ்லீம்கள் மட்டுமே செல்லக் கூடிய பகுதிக்குள் நுழைந்த கேரள தொழிலாளர், தலை தப்பியதுதம்பிரான் புண்ணியம் என்ற கதையாக, மரண தண்டனையிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜோஜோ ஜோசப். சவூதியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கு இந்தவாரத் தொடக்கத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு விரைந்தார்ஜோசப்.
அப்போது மதீனா நகரில் முஸ்லீம்கள் மட்டுமே புழங்கக் கூடிய பகுதிக்குள் நுழைந்து விட்டார் ஜோசப்.இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும், மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால் ஜோசப்பை சவூதி போலீஸார் விடுவித்து விட்டதாக சவூதிக்கான இந்தியத் தூதர் எம்.ஓ.எச்.பரூக்கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தத் தவறுக்காக ஜோசப்புக்கு கடுமையான தண்டனை எதுவும்விதிக்கப்பட மாட்டாது.
அவரை போலீஸார் சிறையில் அடைக்கவில்லை, மரண தண்டனையும் விதிக்கப்படவில்லை. அதுபோலவெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு விடுவேன் என்றுஜோசப் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் செவ்வாய்க்கிழமையேவிடுவிக்கப்பட்டு விட்டார்.
3 நாட்கள் மட்டுமே அவரை போலீஸார் தங்கள் வசம் வைத்திருந்தனர். வேண்டும் என்றே அவர்முஸ்லீம்களுக்கான பகுதியில் நுழையவில்லை என்பதை அறிந்ததால் போலீஸார் அவரை விட்டு விட்டனர்என்றார் பரூக்.












Click it and Unblock the Notifications