அதிமுக கூட்டணியை எதிர்த்த செஞ்சியார்
செஞ்சி:அதிமுகவுடன் இணைந்து விட்ட கட்சி போல் மதிமுக செயல்படுவதாக மதிமுகதுணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
வந்தவாசி தொகுதி எம்.பியான செஞ்சி ராமச்சந்திரன் கூறுகையில்,
நான் மதிமுகவை விட்டு வெளியேறி திமுகவில் இணைய போவதாக வந்துள்ளசெய்திகள் தவறானவை. மதிமுகவை உருவாக்குவதில் என் முன் இருந்தது கொள்கைதான். அதன் அடிப்படையில் உருவான இயக்கம் தான் மதிமுக,
அதிமுகவுடன் கூட்டு என்ற முடிவை நான் கடுமையாக ஆட்சேபித்தேன். இந்தக்கூட்டணி இயக்கத்தை சிதைத்து விடுமோ என்று கருதி அதிமுக கூட்டணியைஎதிர்த்தேன்.
தற்போது வைகோவுக்கு என்னால் எந்த நிர்பந்தமும் இல்லை. எனது மகள்திருமணத்திற்கு முதல்வர் கருணாநிதி உள்பட என் மீது பாசம் உள்ள தலைவர்களுக்குஅழைப்பு விடுப்பேன். குறிப்பாக நெடுமாறனுக்கும் அழைப்பு அனுப்புவேன்.
ஆண்டன் பாலசிங்கம் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற ஜெயலலிதா மறுத்ததால்தமிழர்கள் அரசியல் அறிஞரை இழக்கும் நிலை ஏற்பட்டது.
அதிமுக, கூட்டணியில் இருந்து மதிமுக, வெளியேற வேண்டும் என்றுசொல்லவில்லை. ஆனால், அதிமுகவுடன் இணைந்து விட்ட கட்சி போல்செயல்படக்கூடாது என்றார் செஞ்சி ராமச்சந்திரன்.