சென்னை ஐஐடி மாணவர்களின் ரீ யூனியன்
சென்னை:சென்னை ஐஐடியில் 1981ம் ஆண்டு படித்த 200 மாணவ, மாணவியர் தங்களதுகுடும்பத்தினருடன் வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒரே இடத்தில் கூடிதங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஐஐடி பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்புக் குழுஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழைய மாணவர்கள்சந்திக்கவுள்ளனர்.
200 மாணவர்கள் தவிர மேலும் 350 பேரும் இந்த விழாவில் பங்கேற்க விருப்பம்தெ>வித்துள்ளனர். ஐஐடி வளாகத்தில் இந்த சில்வர் ரீ யூனியன் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள பழைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள்இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா,இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகியநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
சில்வர் ரீயூனியனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்திலும், வெளியிலும் இவை நடைபெறும்.
பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ. 1.27 கோடி வரை நிதி வசூலிக்கப்பட்டுபல்வேறு சமுக பணிகள், ஐஐடி சார்ந்த பணிகளுக்கு செலவிடப்படவுள்ளது. ஊரகப்பகுதிகளில் இன்டர்நெட் மையங்களை ஏற்படுத்துவது, ஊரக வளர்ச்சித் திட்டங்கள்இந்த பட்டியலில் உள்ளன.
சில்வர் ரீயூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் 1981ம் ஆண்டு பாட்ச்மாணவர்கள், சங்கத்தின் www.iitmaa.org என்ற இணையதளத்திலோ அல்லது 044-22578391 என்ற சங்க அலுவலகத்தின் தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என்று தெ>வித்துள்ளார் பாண்டியன்.
அண்ணாமலை மாணவர்கள் சந்திப்பு:
இதேபோல சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1981ம் ஆண்டுபொறியியல் படிப்பை முடித்த மாணவர்களும் வெள்ளி விழா சந்திப்புக்குதிட்டமிட்டுள்ளனர்.
டிசம்பர் 23, 24 ஆகிய நாடுகளில் ஏற்காட்டில் இந்த விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் விழா ஏற்பாட்டாளர்முத்துவை 9840062539 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனசெய்திக்குறிப்பொன்றில் தெ>விக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications