தமிழக டிராவல்ஸ் அதிபர் மலேசியாவில் கடத்தல்
சென்னை:மலேசியா சென்ற விழுப்புரம் டிராவல்ஸ் அதிபர் அந் நாட்டில் கடத்தப்பட்டார்.அவரை விடுவிக்க ரூ. 4 லட்சம் பிணைத் தொகையை வாங்குவதற்காக சென்னைஉதயம் தியேட்டர் அருகே வந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் சென்னை மத்தியகுற்றப்பிரிவு துணை கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில்,
என் அண்ணன் சுப்பிரமணி (38), பெரம்பலூரைச் சேர்ந்த அவரது நண்பர்செந்தில்குமார் ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். மேலும் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்டுகளாகவும்இருந்து வந்தனர்.
ஆனால், தொழிலில் கருந்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். செந்தில்குமார்மலேசியா போய்விட்டார். சுப்பிரமணி தனியாக டிராவல்ஸ் நட்த்தி வந்தார்.வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்காகசுப்பிரமணி அடிக்கடி மலேசியா செல்வார்.
சில நாட்களுக்கு முன்பு மலேசியா சென்ற சுப்பிரமணியை செந்தில்குமாரும் அவரதுநண்பர்களும் கடத்தி விட்டனர். என்னை தொலைபேசி மூலம் அழைத்து தாங்கள்சொல்லும் சென்னை நபரிடம் ரூ.4 லட்சம் கொடுத்தால் உன் அண்ணனைவிடுவிப்பதாக மிரட்டினர்.
இதையடுத்து நிலத்தை விற்று ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு சென்னைவந்துள்ளேன். உதயம் தியேட்டர் அருகே 2 நபர்கள் வருவதாகக் கூறியுள்ளனர்.அவர்களிடம் பணத்தை கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்கள் குறிப்பிட்டஇடத்துக்கு கோவிந்தராஜூடன் அங்கு சென்றனர். கோவிந்தராஜிடம் பணத்தைவாங்குவதற்காக வந்த நபர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள்இருவரும் செந்தில்குமாரின் நண்பர்கள் ராமராஜ், மைக்கேல்ராஜ் என தெரியவந்தது.
பணத்தை வாங்கிவிட்டோம் சுப்பிரமணியை விட்டுவிடுங்கள் என்றுசெந்தில்குமாரிடம் கூறுமாறு அவர்களிடம் போலீசார் கூறினார். அவ்வாறேஅவர்களும் கூறினார்.
ஆனால், சுப்பிரமணியை செந்தில்குமார் மலேசியாவில் விடுவித்து விட்டாரா என்றுஉடனடியாகத் தெரியவில்லை. மலேசிய தூதரகம் மூலமாக அவரை பத்திரமாகசென்னைக்கு கொண்டு வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.