யோபுவிடம் லஞ்சம்: மாட்டும் இன்ஸ்பெக்டர்
சென்னை:போலி பிஷப் யோபு சரவணனிடமிருந்து ரூ. 10 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் மீது உரியபுகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லத்திகா சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில், யோபு சரவணனை கைது செய்யாமல் இருக்கமத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் யோபு சரவணனிடம் லஞ்சமாக பணம் பெற்றதாக (ரூ. 10லட்சம் என்று கூறப்படுகிறது) பத்திரிக்கைச் செய்திகளில் படித்தேன்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது உரிய புகார் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். யோபுவழக்கை சரியாக அவர் விசாரிக்கவில்லை என்று புகார் வந்ததால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல அவர் பணம் வாங்கியதாக புகார் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார் சரண்.
இதற்கிடையே யோபு சரவணன் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications