சென்னை அருகே 400 ஏக்கரில் மருத்துவப் பூங்கா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சென்னை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா மற்றும் தடுப்பூசிமருந்து பூங்கா அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அன்புமணி இதுகுறித்துப் பேசுகையில், சென்னைஅருகே 400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மருத்துவப் பூங்கா மற்றும் தடுப்பூசிமருந்துப் பூங்கா அமைக்கப்படும்.

இந்த வளாகத்தில், உலகப் புகழ் பெற்ற மருந்து நிறுவனங்கள், தடுப்பூசி மருந்துநிறுவனங்கள் தங்களது தயாரிப்புப் பிரிவுகளை தொடங்க அனுமதிக்கப்படுவர். இதன்மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பூசி மருந்துகளின் விலை வெகுவாக குறையும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போலவே இந்த மருந்துப் பூங்காவும்கருதப்படும். இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்ளூர்பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படமாட்டாது. ஒரு ஆண்டில் இந்த மருத்துவப் பூங்கா செயல்பாட்டுக்கு வரும்.

நமது நாட்டில், மருத்து பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவு மிகவும் அதிகமாகஉள்ளது. எம்.ஆர்.ஐ உள்ளிட்ட ஸ்கேன் கருவிகள் 90 சதவீதம்வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால்பரிசோதனைக்காக அதிக தொகையை செலவிட நேரிடுகிறது.

இதே கருவிகளை இங்கே தயாரித்தால் அவற்றின் விலை மிக மிக குறைவாகஇருக்கும். இதன் மூலம் பரிசோதனைக்கான கட்டணமும் வெகுவாக குறையும்.

இதேபோல, சுகாதார இன்சூரன்ஸ் பிரிவையும் மக்களுக்காகத் தொடங்க சுகாதாரஅமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அடுத்த மாதம் உயர் மட்டக் குழுக்கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர் பிரதமருடன் இதுகுறித்து விவாதித்து இறுதிமுடிவு எடுக்கப்படும்.

சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் நமது நாடு மிகப் பெரிய வளர்ச்சியைக்கண்டுள்ளது. நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், முதலீட்டாளர்கள்மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளை நிர்ணயிக்க வேண்டும்.

யோகாசனம் மூலம் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்பதுஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே யோகா மூலம் எய்ட்ஸ், எச்ஐவிவைரஸ் பாதிப்பை குணப்படுத்த முடியும் என்று யோகா நிபுணர் குரு ராம்தேவ்கூறுவதை ஏற்க முடியாது.

அப்படி முடியும் என்றால் அதை அவர் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.யோகா மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக அவரை நான்நிச்சயம் பாராட்டுகிறேன்.

யோகா மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குணப்படுத்தமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவற்றைகுணப்படுத்த முடியும் என்று எங்குமே நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் முடியும் என ராம்தேவ் நினைத்தால் அதை தாராளமாக அறிவியல்பூர்வமாகஅவர் நிரூபிக்கட்டும். நாங்கள் அதைத் தடுக்கவில்லை. அப்படி நிரூபிக்கப்பட்டால்அவருக்கு உதவ அரசே முன்வரும். ஆனால் நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்தை,குணப்படுத்த முடியும் என்று கூறி வருவதை அவர் முதலில் நிறுத்த வேண்டும்.

இதுதொடர்பாக சுவாமி ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து எனக்குத்தெரியாது. ஆனாலும் அது முறைப்படிதான் அனுப்பப்பட்டிருக்கும் எனநினைக்கிறேன் என்றார் அன்புமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+