ஜெ. மீதான 2 கோடி பரிசு வழக்கு தள்ளிவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:முதல்வராக இருந்தபோது தனக்கு பிறந்த நாள் பரிசாக வந்த ரூ. 2 கோடிக்கான டி.டிக்களை தனது கணக்கில்வரவு வைத்துக் கொண்டது தொடர்பாக ஜெயலலிதா மீது சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரிமாதத்திற்கு தள்ளி வைக்கபட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளன்று வெளிநாட்டில் இருந்துரூ. 2.89 கோடிக்கு டி.டிக்கள் அவருக்கு வந்தன. முதல்வராக இருப்பவருக்கு வரும் பரிசுகள் அரசிடம்சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால், இந்தப் பணத்தை மொத்தமாக தனது கணக்கில் ஜெயலலிதா வரவு வைத்துக் கொண்டார். இதுதொடர்பாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியதையடுத்து சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்குவிசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்று செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு இருவரும் ஏற்கெனவே மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த மனுக்களுக்குபதில் அளிக்க கால அவசாகம் கோரினார் சிபிஐ வழக்கறிஞர். இதைத் தொடர்ந்து வழக்கை ஜனவரி 22ம்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+