பஸ்கள் மோதல்-ஒருவர் பலி, 11 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:செங்கள்பட்டு அருகே இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர்படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து தனியார் பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்து. சென்னையில் இருந்துகல்பாக்கத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரு பேருந்தும் செங்கல்பட்டு ரயில்வே கேட் அருகேவந்த போது நேருக்கு நேர் மேதிக் கொண்டன.
இதில் தனியார் பஸ் டிரைவர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பஸ் டிரைவர் வாசுதேவன்,கண்டக்டர் முனுசாமி உள்பட இரு பேருந்துகளில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம்அடைந்த அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications