சிங்கப்பூர்-இந்திய சாப்ட்வேர் நிபுணர் தப்பினார்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:வியட்நாம் நாட்டுப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து சிங்கப்பூரில்வேலை பார்த்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் குமார் (24) சிங்கப்பூரில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.பெடாக் ரிசர்வாயர் சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 18ம் தேதி இவரது வீடு உள்ள மாடியிலிருந்து வியட்நாமைச் சேர்ந்த தின் தான் துயேன்என்பவர் கீழே விழுந்து மரணமடைந்தார்.

இதையடுத்து போலீஸார் ரோஹித் குமாரைக் கைது செய்தனர். வியட்நாம் பெண்ணை ரோஹித் குமார் தனதுவீட்டில் அடைத்து வைத்திருந்ததாக போலீஸார் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரும்தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வியட்நாம் பெண்ணை அடைத்து வைத்திருந்ததாக கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து ரோஹித்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல தற்கொலை முயற்சி குற்றச்சாட்டிலிருந்தும் அவர்விடுவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் வியட்நாம் பெண் இறந்தது தொடர்பான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என போலீஸார்அறிவித்துள்ளனர். இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+