எழுத்தாளர் பிரபஞ்சன் வீட்டில் திருட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பலபொருட்களைத் திருடிச் சென்றனர்.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி பகுதியில் எழுத்தாளர் பிரபஞ்சனின் வீடுஉள்ளது. பிரபஞ்சன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார்.
இந்த நிலையில் சில மர்ம ஆசாமிகள் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தபல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பிரபஞ்சனுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து வந்துவிசாரணை நடத்தி வருகின்றனர். பிரபஞ்சன் ஊர் திரும்பிய பிறகுதான் என்னென்னபொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications