கேபிள் பழுது பார்ப்பு-ரயில் ரிசர்வேஷன் சீரானது
சென்னை:ரயில்வே முன்பதிவு கம்ப்யூட்டர் கேபிளில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.இதையடுத்து சென்னை புறநகர்ப் பகுதிகளைத் தவிர தமிழகத்தின் இதர பகுதிகளில்டிக்கெட் முன்பதிவு சீரடைந்தது.
நேற்று காலை 10 மணியளவில் ரயில்வே முன்பதிவு கம்ப்யூட்டர்கள் திடீரெனபழுதடைந்தன. இதனால் தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் டிக்கெட் முன்பதிவுகடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் டிக்கெட் பெறுவதற்காக காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்திஅடைந்தனர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தரைக்குக் கீழேபதிக்கப்பட்டிருந்த நெட்வொர்க் கேபிள் எரிந்து போனதால்தான் இந்த பழுதுஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கேபிளை சரி செய்யும் பணி முழு வீச்சில் தொடங்கியது.கிட்டத்தட்ட 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பழுது சரி செய்யப்பட்டது.இதனால் 5 மணி நேரத்திற்குப் பின்னர் படிப்படியாக கம்ப்யூட்டர்கள் இயங்கத்தொடங்கின.
தற்போது சென்னை புறநகர் ரயில் நிலையங்களைத் தவிர மற்ற ரயில் நிலையங்களில்கம்ப்யூட்டர் முன்பதிவு சீரடைந்து வருகிறது. புறநகர்ப் பகுதியில் இன்று மாலைக்குள்நிலைமை சரியாகி விடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications