தடுக்கி விழுந்து ப.சிதம்பரம் காயம்
பெங்களூர்:பெங்களூர் ஹோட்டலில் தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டுத் திரும்புகையில் மாடிப் படியில் தடுக்கிமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வலது கால் விரலில் லேசான அடிபட்டது.
இதுகுறித்து நிதியமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது குடும்பத்தினருடன் தனிப்பட்ட விஜயமாக பெங்களூர் சென்றிருந்தார்.சனிக்கிழமை இரவு அவர் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்றார்.
சாப்பிட்டு விட்டுத் திரும்பும்போது, பத்திரிக்கை புகைப்படக்காரர் ஒருவர் அவர்களை புகைப்படம் எடுக்கமுயற்சித்தார். இதைப் பார்த்த ப.சிதம்பரம், இது தனிப்பட்ட விஜயம். புகைப்படம் எடுக்க அனுமதிக்க முடியாதுஎன்று கூறி அந்த புகைப்படக்காரரை புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தி வேகமாக வலதுபுறம்திரும்பினார்.
அப்போது மாடிப் படியில் அவரது கால் இடறி விட்டது. இதில் வலது கால் விரலில் லேசான காயம் ஏற்பட்டது.இதையடுத்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னர் ப.சிதம்பரம்திரும்பினார்.
இந்த சம்பவத்திற்காக சம்பந்தப்பட்ட பத்திரிக்கையின் ஆசிரியரும், புகைப்படக்காரரும் ப.சிதம்பரத்திடம்மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.