ஆந்திரா-வங்கியில் ரூ5 கோடி நகை கொள்ளை
குண்டூர்:ஆந்திர மாநிலம் குண்டூரில் வங்கியை உடைத்து அங்கிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நரசரோபேப்டில் உள்ள சைதன்யா கிராமீன் வங்கி என்ற அந்த மாநில பொதுத்துறை வங்கியில் இந்தக் கொள்ளைநடந்தது.
கிருஸ்துமஸ், ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்றும் நேற்று முன் தினமும் வங்கி மூடப்பட்டிருந்தது.இந்த விடுமுறை தினங்களை பயன்படுத்திக் கொண்டு வங்கியின் முன் பக்கக் கதவை போலி சாவிகள் போட்டுகொள்ளையர்கள் திறந்துள்ளனர்.
பின்னர் உள்ளே இருந்த இரும்பு பெட்டகத்தை கேஸ் கட்டர்களை வைத்து இளக்கி திறந்துள்ளனர். அதில்வைக்கப்பட்டிருந்த நகைகளை அள்ளிக் கொண்டு கும்பல் தப்பியுள்ளது.
பொது மக்கள் வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ. 5 கோடி நகைகள் சுருட்டப்பட்டுள்ளன.
நகரின் முக்கியமான வீதியில், நகைக் கடைகள் நிறைந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் தான்இந்த வங்கி அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஜன சந்தடி நிறைந்த இடத்தில் நடந்துள்ள இந்தக் கொள்ளை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications